×

தூதுவளை பருப்பு ரசம்

தேவையானவை

தூதுவளை இலை – 10
தக்காளி -4
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 8 பல்
கறிவேப்பிலை, கொத்துமல்லி- சிறிதளவு
ரசப் பொடி – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
பருப்பு வேகவைத்த நீர் – 1 கிண்ணம்
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

தக்காளி, கொத்துமல்லி, பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தூதுவளை இலையை சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி அத்துடன் பூண்டைச் சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் பொடித்துக் கொள்ளவும். பருப்பு நீரில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து அதில் பொடித்த தூதுவளை இலை, பச்சைமிளகாய், ரசப்பொடி, மஞ்சள்தூள் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். ரசம் நுரைத்து வரும்பொழுது இறக்கி வைக்கவும். வாணலியை வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் கொட்டி கொத்துமல்லித் தழையைதூவி பரிமாறவும். தொண்டைக்கு இதமான, தூதுவளை பருப்பு ரசம் தயார்.

The post தூதுவளை பருப்பு ரசம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்